அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

Betting with Bank Manager | Tamil Stories | Funny Stories

Dealing Relationship | Tamil Stories | Funny Stories | Tamil Theadal

1+1=3 | Mango Story | Tamil stories | funny stories


 

தேங்காய் மட்டி | Mad Husband



மூன்று கால் விலங்கு | Mad Scientist | Tamil stories | funny stories

ஜல்லிக்கட்டு - புரட்சி மலராது - புரட்சி வெடிக்கும்

ஒருவனை கொல்வதற்கு பதிலாக உதாசினப்படுத்துங்கள்.
நடைபிணமாகி விடுவான்.
கருவறையிலிருந்து வெளிவரும் எந்த ஒரு குழந்தையும் சாதி,மதம்,இனம்,பாரம்பரியம் என எல்லா சாயங்களோடுதான் பிறக்கிறது.இந்த சாயங்கள் அந்த குழந்தைக்கு ஒரு அடையாளத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கிறது. குழந்தை வளர வளர சில சாயங்களை தானாகவே களைத்துக் கொள்கிறது.சில சாயங்கள் இடுகாட்டில் எரித்த பின் அல்லது புதைத்த பின் தான் போகின்றன.

இதில் பிரிக்க முடியாதது என்று பார்த்தால் இனமும்,பாரம்பரியமும்.ஏனென்றால் மிருகமாயிருந்தவன் மனிதனாகி ,சிறு கூட்டமாக வாழ ஆரம்பித்தபோதே இனமும்,பாரம்பரியமும் தொடங்கிவிட்டன.ஒவ்வொரு கூட்டமும் ஒரு இனமாகியது.ஒவ்வொரு இனமும் தனக்கே உரித்தான பாரம்பரியத்தை கொண்டிருந்தது.காலப்போக்கில் வலுவான இனம் நிலை கொண்டது.வலுவற்றவை மறைந்து விட்டன.சில இனங்கள் வலுவற்றவைகளாக்கப்பட்டு நசுக்கப்பட்டன.இங்கே தான் மனித அரசியலும் ஆரம்பிக்கிறது.

வரலாறு முழுவதும் சில இனங்கள் கட்டம் கட்டி அழிக்கப்பட்டிருக்கின்றன.யூதர்கள்,ஆஸ்திரேலிய பழங்குடியினர்,செவ்விந்தியர்கள் என இந்த இன அழிப்புப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.நவீன மனித வரலாற்றுப் பட்டியலில் அதிகம் அழிக்கப்பட்ட இனம் யூதர்கள்.தற்போது தமிழனும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளான்.சில இனங்கள் ஆக்கிரமிப்பிற்காக அழிக்கப்பட்டன.ஆனால் யூதர்களும்,தமிழர்களும் மட்டும் இனம்,புத்திசாலிதனம்,பாரம்பரியம் ஆகிய காரணங்களுக்காக அழிக்கப்படுகிறார்கள் என்பது ஆச்சரியம் கலந்த உண்மை.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே உருவான மூத்த குடிமக்கள் இந்த தமிழ் மக்கள்.தமிழர்களின் பூர்வீகம் இந்தியா என்று சொன்னால் சிரிப்பு தான் வரும்.உற்று பாருங்கள் நிலத்தில் ஒட்டியிருந்தாலும் நிறத்தில், குணத்தில்,அறிவில் தமிழர்களுக்கும் மற்ற மாநிலத்தவருக்கும் நிறைய வேற்றுமைகள்.தமிழனின் மூலம் குமரிக்கண்டமா அல்லது வேறா என்பது முக்கியமல்ல.தமிழனின் மூல வேர் இந்தியா அல்ல என்பது மட்டும் உண்மை.
தன்னை சுற்றி ஒரு புத்திசாலி இனம் இருக்கும் போது அவன் சிறுபான்மையாக இருந்தால் இந்த உலகம் அந்த இனத்தை கருவறுக்கும். இல்லையென்றால் அவனை உதாசீனப்படுத்தும்.இது வரலாறு கூறும் உண்மை.

வீட்டில் மூத்த அண்ணன் இருக்கும் போது இளைவனுக்கு எப்படி கிடைக்கும் மதிப்பும் மரியாதையும்.தமிழ் தான் எல்லா மொழிகளுக்கும் மூலம் என ஒரு ஆய்வு கூறுகிறது.இப்போதுள்ள இனங்கள் தோன்றுவதற்கு முன்னரே நாம் இலக்கியங்களை படைத்து யாதும்ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லிவிட்டோம்.எதிரியாக இருந்தாலும் வீட்டிற்குள் நுழைந்துவிட்டால் விருந்தினராக கருதும் பண்பாட்டை உலகத்திற்கே காட்டியவன் தமிழன்.இப்படி எல்லாவற்றிற்கும் ஆதியாகி, மூலமாகி போய்விட்டாதால் என்பதால் தானோ எதிர்க்கப்படுகிறான்.ஒதுக்கப்படுகிறான்.வஞ்சிக்கப்படுகிறான்.

இதனால் தான் தமிழன் தன் அடையாளத்தை காக்கவே போராட வேண்டியிருக்கிறது. உலகத்திற்கே உழவைப் பற்றி பாடி பாடம் எடுத்தவன் ஒரு சொட்டு நீருக்காக உயிரை விடுகிறான்.ஏதோ ஒரு அற்ப பூச்சியின் சாவைப் போல் தமிழனின் சாவு நடக்கிறது.தமிழர்களுக்குள் இருக்கும் சில அரசியல் புல்லுருவிகளால் மொத்த தமிழ் இனமும் அசிங்கப்பட்டு இருக்கிறது.முதலில் சொன்ன இரண்டு வரிகளைப் போல் தமிழனை அழிக்க முடியாது என தெரிந்த பின் இப்போது உதாசினப்படுத்தி நடை பிணமாக்கப் பார்க்கிறார்கள்.சில அரசியல் மடையர்கள்.

சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டே என எங்கள் கவியரசர் சொன்னது போல் சற்றும் வீரியம் குறையாமல் போராட ரோட்டிற்கு வந்து விட்டார்கள் தமிழர்கள்.அதுவும் கண்ணியத்துடன்.உலகத்திற்கே பாரம்பரியத்தை சொல்லிக்கொடுத்தவர்களாயிற்றே.இதை வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமாக பார்க்கமுடியாது.பல நாள் மூடிவைத்த வெவ்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடாகதான் பார்க்க முடியும்.
ஒரு இனத்தின் உரிமைகள் மறுக்கப்படும் போது,அடையாளங்கள் அழிக்கப்படும் போது போராட்டம் வெடிக்கும்.

உலகத்தில் எங்கும் புரட்சி மலர்வதில்லை.புரட்சிகள் வெடிக்கின்றன.ஆனால் ஒவ்வொரு புரட்சிக்கு பின்னாலும் ஓர் ஒடுக்கப்பட்ட இனத்தின் அவல குரல் இருந்து கொண்டேதான் இருக்கிறது.அது இப்போது தமிழர்களின் குரலாக இருக்கிறது. அதுவும் ஓங்கி ஒலிக்கும் குரலாக இருக்கிறது.அது வரலாறுகாணாத வெற்றியாக வேண்டும்.அதற்கு நாம் நம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும்.ஆகவே இதை ஜல்லிக்கட்டிற்கான போராட்டமாக பார்க்காமல்,இனத்தின் எழுச்சியாக ,புரட்சியாக பார்க்கவேண்டும்.

"அதர்மத்தை எதிர்த்து நீங்கள் போராடுகிறீர்கள் என்றால்,நீங்களும் என் நண்பனே !" -- என்ற சேகுவராவின் வார்த்தைகளுக்கு உதாரணமாக நண்பர்களாக போராட்டத்தை ஆரம்பித்த அனைத்து மாணவர்களுக்கு உதவியாக தோளேடு தோள் சேர்ந்து போராடுவோம்.தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்து செல்வோம்.

பேசாத பக்கங்கள் : விடலைப் பருவமும் உணர்வு தூண்டல்களும் 1

எதை எதையோ பேசிவிட்டு,பேச வேண்டிய சில விசயங்களை பேசாமல் மறந்து விடுவது மனிதனின் இயல்பு.வாழ்க்கையென்னும் புத்தகத்தில் எல்லா பக்கங்களையும் எல்லோரும் படிப்பதில்லை.படிப்பதில்லை  என்பதைவிட படிக்க விரும்புவதில்லை.அப்படியெல்லோரும் பேச மறுக்கும் பக்கங்களில் ஒன்று விடலைப் பருவமும் அப்போது ஏற்படும் உணர்வு தூண்டல்களும்.



விடலைப்பருவம் என்றவுடன் முதல் காதல் ,நண்பர்கள் அரட்டை என மேம்போக்காக மட்டுமே பேசிக்கொண்டே போவோம்.அந்த பருவத்தில் ஏற்பட்ட எதிர்பாலின ஈர்ப்பு, உடல் மாற்றங்கள்,உணர்வு மாற்றங்களை என முக்கியமான விசங்களை பேச மாட்டோம்.அவை ஏன் ஏற்படுகின்றன?அவற்றை எப்படி சமாளிக்க வேண்டும் என்று நமக்கு யாரும் சொல்லி தருவதில்லை.

இன்று செய்திதாள்களை படிக்கும் போது பாலியல் சம்பந்தமான குற்றங்களே அதிகமாக காணப்படுகின்றன.பாலியல் குற்றங்கள் என்றாலே,குற்றவாளியை தூக்கில் போட வேண்டும் என்று உடனே போர்க்கொடி தூக்கிவிடுகிறார்கள்.உண்மையில் எல்லா குற்றங்களுக்கும் ஏதோ ஒருவகையில் இந்த சமூகமும் காரணமாக உள்ளது.பசிக்கும் போது எப்படி சாப்பிட்டு பசியை போக்க வேண்டும் என்று சொல்லி தரும் சமூகம்,ஒரு மனிதனின் உடலில் காமம் தலை தூக்கும் போது அதை எப்படி போக்க வேண்டும் என்று சொல்லி தருவதில்லை.அதற்கு வடிகாலும் அமைத்து தருவதில்லை.

மனிதனும் இந்த பிரபஞ்சத்தால் படைக்கப்பட்டஒரு மிருகமே.என்ன வித்தியாசம் என்றால் மனிதன் சிந்திக்க தெரிந்த மிருகம்.பசியெடுத்தால் அதை எப்படி முறைப்படி போக்கி கொள்ள  வேண்டும் என சட்டதிட்டங்கள் வகுத்து அதன் படி வாழும் மிருகம்.ஆனால் எல்லா மிருகங்களுக்கும் உயிர்வாழ அடிப்படையான மூன்று விசயங்கள் தேவை.
  1. உணவு
  2. பாதுகாப்பு
  3. காமம்
மேற்சொன்ன மூன்று விசயங்களும் இயற்கையான  உணர்வுகள். இதில் எது ஒன்று குறைந்தாலும் மனிதன் மிருக நிலைக்கு தள்ளப்பட்டு போராட ஆரம்பிப்பான்.உலகத்தில் நடக்கும் பாதிக்கு மேல் குற்றங்களுக்கு இவையே காரணம்.அதிலும் விடலைப்பருவத்தில் ஏற்படும் காம உணர்வுகள் கட்டுப்பாடில்லாமல் இருக்கும்.அந்த பருவத்தில்தான் உடலும்,மனமும் தனது முழுபலத்தையும் காமத்தின் பக்கம் திருப்பும்.இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கை கொடுக்கும் ஒரே பணி காமத்தின் வழியே சந்ததியை பெருக்குவது.விடலைப் பருவத்தில் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு இனம் புரியாத தடுமாற்றத்தில் இருப்பான்.கவிஞர்கள் சொன்ன மாதிரி கல்லுக்கு சேலைகட்டி தொட்டுப்பார்க்கும் வயது அது.

காமம் ஒரு குற்றம் என்றால் அந்த உணர்வை படைத்த கடவுளும் ஒரு குற்றவாளிதான். நாம் காமத்தையும் குற்றம் என்கிறோம்,அதை பற்றி பேசு பவர்களையும் குற்றவாளி என்கிறோம்.உண்மையில் மனிதன் மட்டுமே ஒரு நாளில் பாதி நேரமும்,வருடத்தில் எல்லா நாளும் காமத்தை பற்றி நினைக்கிறான்.பொய்யென்றால் நாய்களைப் பாருங்கள்.அதற்கான மாதத்தை தவிர வேறு மாதத்தில் இணை சேருவதில்லை.எந்த நாயும் இன்னொரு நாயை கற்பழித்து கொல்லுவதில்லை.அந்த பெண் நாயின் அனுமதி கிடைக்காத வரையில் அதை தீண்டுவதில்லை.சாதாரண நாய்களுக்கே அழகான சட்டம் இருக்கும் போது மனிதர்களுக்கு ஏன் இல்லாமல் போனது.இதற்கான காரணத்தை கண்டுபிடித்தால் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிடலாம்.

நாய்களைப் பொறுத்தவரை உணவு மற்றும் பாதுகாப்பு என்பது அன்றாடம் போராடி பெற வேண்டிய ஒரு நிலை.எனவே வாழ்வின் பெரும்பகுதியை உணவு மற்றும் பாதுகாப்புக்காக செலவிட வேண்டிய நிலை.விடலை பருவத்தை எட்டுவதே அதிசயமான ஒன்று.அப்படி எட்டிவிட்டால் சம்மதிக்கும் துணையுடன் இணையலாம்.

ஆனால் மனிதனைப் பொறுத்தவரை விடலைப் பருவம் என்பது ,படிப்பு, பொறுப்பு என கடக்க வேண்டிய முக்கியமான கட்டம்.ஆனால் ஏற்கனவே உணவு ,பாதுகாப்பு என்பது இயல்பாக எல்லோருக்கும் இயல்பாக கிடைப்பதால் மூன்றாவது நிலையான காமமே மேலோங்கி இருக்கும்.தற்போது ஏற்பட்டுள்ள கையடக்க தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் நாகரீக கவர்ச்சி வாழ்க்கை காரணமாக கனியாக மாறவேண்டிய காமம்.வெறியாக மாறிவிடுகிறது.அடைந்தே தீர வேண்டும் என்று இயற்கையான உணர்விற்கு எதிராக தடை ஏற்படும் போது வெறி உச்சமாகி மிருகத்தின் நிலையை விட கீழாக போகிறான்.

இயற்கையிலே ஆண் பெண்ணை தேடுபவன்.பெண் ஆணை தேர்வு செய்பவள்.மற்றவையெல்லாம் வெறும் பசப்பு வேலைதான்.ஆனால் என்னென்ன வழிகளில் முடியுமோ, அவ்வளவு வழிகளிலும் ஒரு ஆணுக்கு  மறுக்கப்படும் போது அவன் இயல்பாகவே போராடுவான்.விடலைப்பருவத்தில் இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு ஆணின் காமத்தை உச்ச நிலைக்கு எவ்வளவு தூண்ட முடியுமோ அவ்வளவு தூண்ட வசதிகள் வந்துவிட்டன.ஆனால் அதை அவன் முறையாக தீர்த்துக்கொள்ள வேண்டிய வடிகால் கிடைக்காத காரணத்தினால் இளம் வயது குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

------------------------------------------தொடரும்----------------------------------------------------------





எனர்ஜி டானிக் : கடினமானதை தேர்ந்தெடுங்கள்

மிக எளிதான விசயம்,மிக கடினமான விசயம் ரெண்டில் ஒன்றை தேர்ந்தெடிக்கச் சொன்னால், எதை தேர்ந்தெடுப்பீர்கள்?
மிகச்சிறப்பான ஒருஅணி,மிகச்சுமாரான ஒரு அணி இரண்டில் ஒன்றுக்கு தலைமை தாங்கச் சொன்னால்,எதற்கு தலைமை தாங்குவீர்கள்?பெரும்பாலும் சிறப்பான ஒன்றை மட்டுமே நாம் தேர்ந்தெடுப்போம்.உண்மையில் சிறப்பான அணிக்கு தலைமை தாங்கினால் சிறப்பான வெற்றி பெறலாம்.சுமாரான அணிக்கு தலைமை தாங்கினால் சிறப்பான அனுபவத்தையும், வாழ்க்கை பாடத்தையும் கற்கலாம்.

வாழ்க்கைக்கு வெற்றியை விட சிறப்பான அனுபவமும், கற்ற பாடமும் மிக அவசியம்.சின்ன வயதில் தெரிந்தோ ,தெரியாமலோ இந்த பழக்கம் என்னிடம் இருந்தது.கிரிக்கெட் அல்லது எந்த விளையாட்டாக இருந்தாலும் மிகச் சுமாரான அணியின் பக்கம் சேர்ந்து விளையாடுவது பழக்கமாக இருந்தது.இப்போது வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் போது என்னுடைய பழக்கத்தினால் நான் கற்ற படங்கள் என் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் எனக்கு மிக உறுதுணையாக இருக்கின்றன.

தொடர் தோல்விகள்

மிகச் சுமாரான அணியாக இருப்பதால் தொடர் தோல்விகள் என்பது நிதர்சனம்.மிக அரிதாகவே வெற்றி கிட்டும்.தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் தானாக ஏற்பட்டுவிடும்.தொடர் தோல்விகளை கூட தாங்கிக்கொள்ளும் மனோ திறன் ஏற்படும்.மொத்த அணியுமே முன்னேறாத வரை வெற்றிக்கு வாய்ப்பில்லை என்ற பாடம் புலப்படும்.

கற்றுக்கொள்ளுதல் மற்றும் கற்றுக்கொடுப்பது

மிகச்சிறப்பான அணிக்கு எதிராக விளையாடும் போது கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள  ஆரம்பிப்போம்.நம்முடைய ஆட்டத்திறனும் மெருகேர ஆரம்பிக்கும்.மெது மெதுவாக கற்றவற்றை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு கற்றுக்கொடுக்க ஆரம்பிப்போம்.நம்மை அறியாமலே ஒரு நிபுணனாக ஆரம்பிப்போம்.நிபுணன் ஆன பின் பயிற்சியாளராக மாறி மொத்த அணிக்கு சொல்லிக்கொடுப்போம்.

விமர்சனங்களை புறந்தள்ளுதல்

திறமையான அணியோடு மோதும் போது விமர்சனங்கள் வருவது சாதாரணம்.எள்ளி நகையாடுதல்,மோசமான வார்த்தைகள் அல்லது கோபத்தை தூண்டும் நடத்தைகள் என எல்லாம் அருவியாக பொழியும்.எல்லாவற்றையும் பொறுமையாக, திறமையாக கையாளும் போது  வெற்றியின் ரகசியங்கள் தெரிய ஆரம்பிக்கும்.

ஒரு அணியாக ஆடுவது

தனி மனிதனாக எவ்வளவுதான் சிறப்பானதாக ஆடினாலும்,ஒரு அணியாக ஆடினால் தான் வெற்றிகிட்டும்.அணியில் ஒருவரின் சிறு தவறுகூட மொத்த அணியின் வெற்றியை பாதிக்கும்.தனிமனித திறமையை குழுவின் திறமையே வெற்றிக்கு முக்கியம்.

பலம் மற்றும் பலவீனங்கள்

சுமாரான அணியாக இருப்பதால் நம்முடைய பலவீனங்கள் எளிதில் தெரிய ஆரம்பிக்கும்.தனி மனிதனின் பலங்களை வைத்து, அணியின் பலவீனத்தை மறைப்பதே  விளையாட்டின் தந்திரம் என்பது புரிய ஆரம்பிக்கும்.இறுதியில் தன்னம்பிக்கை மிக்க மனிதனாக இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற ஒற்றை வசனத்துடன் போராட ஆரம்பிப்போம்.

ஒரு சுமாரான அணியோடு வாழ ஆரம்பித்தை என் வாழ்க்கை எத்தனையோ பாடங்களை மனதில் விட்டுச்சென்றது.வெற்றிக்காக ஆடாமலும்,தோல்விக்காக அழமாலும் எல்லாம் வாழ்க்கையின் ஒரு அங்கம் என மனதை பண்படுத்திவிட்டது.வாழ்க்கையின் இரண்டு பக்கங்களில் இருந்தும் வாழ்க்கையை ரசிக்க பழகிக் கொண்டேன்.வாழ்க்கையில் நம்முடைய சிறு தேர்வு நம்மை எங்கையோ கொண்டு சென்றுவிடுகிறது.தேர்ந்தெடுக்கும் போது கடினமானதையே தேர்ந்தெடுப்போம்.வாழ்க்கை  நம்மை செதுக்க அனுமதி அளிப்போம்.




ஜாலியாக ஜாவா கற்கலாம்: கணினி மொழி (computer language)

நாம் கருத்துகளையும்,உணர்வுகளையும் மொழியின் வாயிலாகவே வெளிப்படுத்துகிறோம்.ஒருவருக்கொருவர் கருத்துகளை பரிமாறிக்கொள்ள மொழி மிக அவசியமான ஒன்று.அதுபோல் கணிப்பொறியுடன் இணைந்து செயல்பட கணினிக்கு என்று பிரத்தியேக மொழிகள் உண்டு.ஆனால் அடிப்படையில் கணினிக்கு தெரிந்த ஒரே மொழி இயந்திர மொழி(machine language) அல்லது இருநிலை மொழி(binary language) மட்டுமே.நாம் கணிப்பொறியுடன் இணைந்து செயல்பட இயந்திர மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.அது மிகவும் சிக்கலானதாகவும், புரிந்து கொள்ள கடினமானதாகவும் இருப்பதால் நமக்கு உயர்மட்ட கணினி செயலாக்க மொழிகள் (high level programming  language)தேவைப்படுகிறது.

உதாரணமாக நமக்கு தமிழ் மட்டுமே தெரியும் என வைத்துக்கொள்வோம்.ஒரு ஜெர்மன் நபருடன் உரையாட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?ஒன்று ஜெர்மன் மொழி படிக்க வேண்டும் அல்லது ஜெர்மனும்,தமிழும் தெரிந்த மொழிபெயர்ப்பாளரை(translator) உடன் வைத்துக்கொள்ள வேண்டும். கணினி செயலாக்க மொழிகள் இந்த மொழிபெயர்ப்பாளர் பணியைதான் செய்கின்றன.நாம் செய்ய வேண்டிய செயல்களை மனிதர்களுக்கு புரிந்த ஆங்கில மொழியில் சொன்னால் இந்த கணினி செயலாக்க மொழிகள்(programming  languages) கணினிக்கு புரியும் வகையில் இயந்திர மொழியில்(machine language) மொழிபெயர்த்து கொடுத்துவிடும்.

பொதுவாக மனிதர்களுக்கு புரியும் மொழியினை உயர்மட்ட மொழிகள் என்றும்((high level languages),இயந்திர மொழியினை கீழ்மட்ட மொழிகள்(low level  languages) என்றும் கூறுவர்.பெரும்பாலான கணினி செயலாக்க மொழிகள்(computer programming  languages) இந்த உயர்மட்ட மொழிவகையினை சேர்ந்தவை.

உயர்மட்ட மொழிகளால் முக்கியமான பலன்கள் உண்டு.
  • கற்றுக்கொள்வது எளிதாகிறது
  • கடினமான கணினி செயல்பாட்டினை புரிந்துகொள்ள அவசியமில்லை
  • நாம் செய்ய வேண்டிய செயலை மட்டும் கவனித்தால் போதும்

கணினி மொழியினை பொறுத்தவரை மேல் மட்ட மொழியிலிருந்து கீழே செல்ல செல்ல சிக்கல்கள் அதிகரித்துக்கொண்டே செல்லும்.இதனால் புரிந்து கொள்வதும் கடினமாகிறது. நாம் நம் செயல்முறையை மேல் மட்ட மொழிகளின் மூலமாகவோ அல்லது இயந்திர மொழியின் மூலமாகவோ செய்யலாம்.மேலே சொன்னவாரு கீழ் மட்டமொழியின் மூலம் செய்யும் போது அதிக சிக்கலும்,அதிக நேர விரயமும் ஏற்படுகிறது.இதனால் பெரும்பாலும் உயர்மட்ட மொழிகளிலே எல்ல கணினி செய்முறைகளும்
 எழுதப்படுகின்றன.

உயர்மட்ட மொழிகளுக்கு உதாரணமாக ஜாவா,சி,சி++ மொழிகளை கூறலாம்.ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்புகள் உண்டு.நம் தேவையை பொருத்து மொழியை தேர்தெடுக்க வேண்டும்.

  • இயந்திர மொழி(machine language) 
  • இருநிலை மொழி(binary language)
  • கணினி செயலாக்க மொழிகள்(programming  languages)
  • உயர்மட்ட கணினி செயலாக்க மொழிகள் (high level programming  language)
  • கீழ்மட்ட மொழிகள்(low level  languages) 
  • மொழிபெயர்ப்பாளரை(translator)  


முந்தய பதிவுகள் :

கணிப்பொறி செயலாக்கமுறை(computer programming)


                                                                                 ---- பயணம் தொடரும் ----

பணத்தால் தேர்தலில் ஜெயிக்க முடியுமா?

ஒவ்வொரு மனிதனுக்கும்  ஒரு விலையுண்டு
பணத்தை நாம் சம்பாதிக்காவிட்டால்
பணம் நம்மை சம்பாதித்துவிடும்.

பணம் பத்தும் செய்யும் என்பதை விட பணம் எல்லாம்செய்யும் என்பதே உண்மை.நாம் வாழும் இந்த உலகமே பணம் என்னும் மாயையால் பின்னப்பட்ட மெய்நிகர் உலகம்.நாம் பார்க்கும் செய்திகள்,சாப்பிடும் சாப்பாடு ,பிடித்த ,பிடிக்காத என எல்லாவிசயத்தையும் பணமே தீர்மானிக்கிறது.பெரும் ஊழல் என செய்தி படிக்கிறோம்.ஊழல் செய்தவர் விடுவிக்கப்பட்டசெய்தி எந்த பத்திரிக்கையிலும் வருவதில்லை.பணம் கொடுத்து செய்தியால் ஒருவர் மரியாதையை குறைக்கலாம்.பணம் கொடுத்து ஒருவர் மரியாதையை கூட்டலாம்.பிரச்சனைகளை திசை திருப்பலாம்.பணமென்னும் பூதத்தின் பிடியில் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது.

சரி பணம் தேர்தல் முடிவுகளை மாற்றுமா?

கண்டிப்பாக மாற்றும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.அமெரிக்க அதிபர் தேர்தலிலே பல முறை அதிக பணம் செலவு செய்தவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.ஒரு மனிதனுக்கு நூறு ரூபாய் என்றால் ஏழுகோடி மனிதர்களுக்கு கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்.இவ்வளவு கோடி கோடியான பணத்தை செலவு செய்வது வெறும் ஒரு சதவீத மனிதர்கள்.இந்த ஒரு சதவீத மனிதர்கள் ஏன் பணத்தை முதலீடு செய்ய வேண்டும்?

ஏனென்றால் தங்களுக்கு சாதகமான,தங்கள் தொழிலுக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்க ஒத்துழைப்பு தருபவர்களை வெற்றி பெற வைக்க இப்பணத்தை செலவழிக்கிறார்கள்.இப்பணத்தை பயன்படுத்தி எதிர்மறையான விளம்பரங்களை உருவாக்கி எதிரணியை  தோற்கடிக்கவே பயன்படுத்துகிறார்கள்.

உதாரணமாக ஒரு அமைச்சரை பற்றி வாட்ஸ் ஆப்பில் அசிங்கமான ஒரு செய்தி இந்த தேர்தல் நேரத்தில் ஏன் வரவேண்டும்.பைத்தியம்,முட்டாள் என தாங்கள் நினைக்கும் தோற்றத்தை எதிரணியினர் மீது ஏற்படுத்த இப்பெரும் பணம் பயன்படுகிறது.பெரும்பாலும் இப்பணத்தில் மஞ்சக்குளிப்பது என்னவோ செய்தி நிறுவனங்கள் தான்.இதற்கென பிரத்தியேக கார்ப்ரேட் நிறுவனங்களே இருக்கின்றன.

நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.என்ன பஞ்ச் பேச வேண்டும்.நம் நடைவுடை பாவணி என எல்லாமே அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.அது மட்டுமில்லாமல் எதிர் அணியின் மீது திட்டமிட்டு எதிர்மறையான செய்திகள் பரப்புவது,அவர்களின் மரியாதையை மக்களிடம் குறைப்பது என எல்லாவற்றையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.நாம் பணம் கொடுக்க தயாராக இருந்தால் யாரை வேண்டுமானாலும் கேனையனாக்கலாம்,குடிகாரானாக்கலாம்.

இதையெல்லாம் படிக்கும் போது தற்போது தமிழ் நாட்டு அரசியலில் நடக்கும் காமெடி காலாட்டாக்களை ஒப்பிட்டு பாருங்கள் எல்லாம் புரியும்.நிதனமாக யோசித்தால் இவையெல்லாமே மக்களாகிய நம்மை கடைசிவரை மடையர்களாகவே வைக்க பெரும் பணம் படைத்தவர்கள் செய்யும் சூழ்ச்சி என்பது நன்றாகவே புரியும்.

இவ்வளவு பணம் கொட்டி நல்லது செய்ய இவர்கள் என்ன பாரி வள்ளலா?அவர்களை பொருத்தவரை இதும் ஒரு வகையான முதலீடு.நமக்கு நூறு ரூபாய் கொடுத்து தேர்தலில் வெற்றி பெருபவர்கள் ,முதலீடான நூறு +அடுத்த தேர்தலுக்கான முதலீடாக நூறு+ லாபமாக நூறு என முந்நூறு சம்பாதித்தால் மட்டுமே லாபம்.இந்த லாபத்தை மக்களின் பையில் இருந்து முறையாக எடுப்பதற்கு தான் இந்த அரசியல் ஆட்டம்.

நம் பையில் நூறை வைப்பது போல் வைத்து,நம்மையே உலக வங்கியுடம் அடகு வைத்து பல லட்சம் கோடி கடன் வாங்கி தங்கள் பைக்குள் வைத்துக்கொள்வார்கள். சம்பந்தமே இல்லாமல் பொருளின் விலைகளை ஏற்றி நம் பையில் இருந்து சில பல நூறுகளை எடுத்துக் கொள்வார்கள்.

இந்த சூது தெரியாமல் நூறு தானே என பணத்தை வாங்கி பையில் வைத்து ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்துவிடுகிறோம்.அரசியல்வாதிகளோ பெரிய நாம கட்டிவாங்கி நாமத்தை நமக்கு சாத்துகிறார்கள்.இன்று நாம் வாங்கும் நூறுதான் நாளைய பல கோடி ஊழல்களுக்கு அடித்தளம்.மக்களுக்கு இந்த பண அரசியல் புரியாதவரை பணத்தையும், அரசியல் வாதிகளையும் குறை சொல்லி எந்த பயனும் இல்லை.