ஓர் அழகான எழுத்து முயற்சி.

அன்பால் கொல்லாதே

15 comments
அன்பால் கொல்லாதே
மென்மையே மென்மையென
பொன்னிற மேனியென
அழகியதொரு பட்டாம்பூச்சி
தோட்டத்தில் பறக்கக்கண்டேன்
மலர்களின் மேலமர்வதுமாய்
மகரந்தம் குடிப்பதுமாய்
இடுப்பில் கயரில்லாமல்
சுதந்திரமாய் பறக்கக்கண்டேன்

உணர்வுகள் தடுமாற
அன்புவெள்ளம் பொங்கிவர
இதயத்தில் இடமொதிக்கி
அன்பென்னும் கூட்டிலடைத்தேன்
அன்பென நினைத்து
நான் செய்த காரியங்கள்
சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்க
நிறையிழந்த இலையென
அன்பில் கருகி
பிணமாய் காட்சியளித்தது
அன்புகூட கொல்லுமென
கடைசியாய் வந்த ஞானம்
கண்ணீர்த்துளிகளுடன் சொன்னது
அன்பால் கொல்லாதே!

15 comments :

  1. கவிதயும் பேசுமோ...அன்பால் கொல்லாதே மாப்ள!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  2. அருமை... அன்பும் கொல்லும். அழகான தத்துவம். எடுத்தக்கொண்ட பட்டாம்பூச்சிக் கருவும் வெகுபொருத்தம். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  3. Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  4. எல்லாரையும் வாழவைக்கும் அன்பு. சிலரை மட்டும் வீழ வைத்துவிடுவது ஏனோன்னு எனக்கு இன்னமும் புரியாமலே இருக்கு

    ReplyDelete
  5. அழகு கவிதை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அன்பும் கொல்லும்!அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  7. அளவிற்கு மீறினால் அன்பும் நஞ்சாகலாம்!! அற்புதமான கவிதை!

    ReplyDelete
  8. இதயத்தில் இடமொதிக்கி
    அன்பென்னும் கூட்டிலடைத்தேன்..

    இவ்வரிகள் என்னை கவர்ந்தது.மிக அருமையான கவி சகோதரனே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  9. அருமை அருமை அருமை.வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை சேகரன் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..