ஓர் அழகான எழுத்து முயற்சி.

விடைகொடு எங்கள் நாடே!

6 comments
விடைகொடு எங்கள் நாடே!
விடைகொடு எங்கள் நாடே!
சகோதர சகோதரிகளே
நேரம் நெருங்கிவிட்டது.
நம் தொப்புள் கொடிகளை
மறந்து தொடர்பறுக்கும்
நேரம் நெருங்கிவிட்டது.
இந்தியர்களே உங்களுக்கு
எங்களை பற்றி கவலைபட நேரமில்லை.
இந்தியன் இந்தியனென
கத்தி கத்தி வாய்வலித்துவிட்டது.
இந்திய நாட்டில் இருந்து
நாங்கள் பிரிந்து விடுவோமென
தெரிந்துதான் தமிழ்நாடென
பெயர் சூட்டிவிட்டார்கள் போலும்.
எங்கள் வலியை புரிந்து கொள்ளாத
இந்தியர்களிடம் என்ன உறவுவென?
என் உள்மனதின் கேள்விக்கு
உங்களிடம் பதில் இல்லை.
பக்கத்து மாநிலக்காரனோ
தண்ணீர் தர மறுக்கிறான்.
பக்கத்து நாட்டுகாரனோ
என் உறவுகளை கொன்று குவிக்கிறான்.
உங்கள் சாக்கடை அரசியலோ
மின்சாரம் தர கூட மறுக்கிறது.

இந்தியா என்னும் மாயை
உண்மையில் எங்கள் இரத்ததை
குடித்துக் கொண்டிருக்கிறது.
என் தாய்மார்களை காக்காத
இந்த தாய்மண்
எங்களுக்கு தேவையில்லை.
தாகத்திற்கு தண்ணீர் தரா
ஒரு சகோதரத்தும் தேவையா?
சகோதரனின் வலியை உணரா
ஒரு சகோதரத்தும் தேவையா?
இந்திய சகோதரா ?
உன் வலியை என்னால் உணரமுடியவில்லை !
என் வலியை உன்னால்  உணரமுடியவில்லை !
பிறகென்ன சகோதரத்துவம்
பிறகென்ன ஒற்றுமை
விட்டு விடுங்கள் எங்களை
கனத்த இதயத்துடன்
பிரிந்து விடுகிறோம்.
நாங்கள் இந்தியனாக
வாழ விரும்பவில்லை.
ஒரு நல்ல மனிதனாக
வாழ விரும்புகிறோம்.
ஒரு  நாடு வாழ
ஒரு ஊரை பழிகொடுக்கலாம்தான்
அதற்காக எங்களை மட்டுமே
பழிகொடுத்துக் கொண்டிருக்கும்
உங்கள் இந்திய அரசியல்
எங்களுக்கு தேவையில்லை!






6 comments :

  1. இந்தியா நிச்சயம் மெரிக்காவுக்கு ஆதரவளிக்க வேண்டும் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு இலங்கை பதில் சொல்லியே ஆக வேண்டும்.....

    ReplyDelete
  2. நல்ல கருத்துள்ள ஒரு கவிதை அருமை நண்பா

    ReplyDelete
  3. பிரிவினை விதை விதைப்பது நல்லதல்ல . தவறுகளை சுட்டிக் காட்டலாம் ,பக்கத்துக்கு வீட்டுக்கு தண்ணீர் கொடுக்கும் மனநிலை கூட நமக்கு இல்லை . முதலில் நாம் திருந்தலாமே .

    ReplyDelete
  4. சிந்திக்க வேண்டிய தருணமிது. உன் வலியை என்னால் உணர முடிகிறது ஆனால் என் வலியை....!?

    ReplyDelete
  5. என்ன சொல்லவென்றே தெரியவில்லை தம்பி !

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..