அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

புத்தாண்டு வாழ்த்துகள் -2014

2 comments
வருடங்கள் கடப்பதை மனம் மறந்தாலும் ,
உடல் காட்டி கொடுத்துவிடுகிறது.
இழப்புகள் வலித்தாலும்,
வாழ்க்கை திருப்பங்கள் இனிக்கின்றன.
இருள் பயமூட்டினாலும் ,
ஒளி நம்பிக்கையளிக்கிறது.
அவரவருக்கொரு கொள்கை,அதற்கொரு பயணம்,
எங்கோ சந்தித்தோம் ,எங்கோ போகிறோம்?
இளைப்பாறும் நேரம் சந்தித்துக்கொள்கிறோம்,பகிர்ந்துகொள்கிறோம்.
வாழ்க்கை நம்மை எங்கோ அடித்து செல்கிறது.
சில நேரம் அழுகிறாம்,சில நேரம் சிரிகிறோம்,
சில நேரம் தோற்கிறோம்,சில நேரம் ஜெய்க்கிறோம்.
திரும்பி பார்க்கும் போது,
இந்த கூத்து வாழ்க்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
முகங்கள் மாறினாலும் அன்பு மாறுவதில்லை,
எல்லைகள் தாண்டினாலும் நட்பு மாறுவதில்லை.
தோல் கொடுக்க தோழர்கள் உண்டு,
அன்பு பாராட்ட உறவுகள் உண்டு.
வாழ்க்கையை வாழ்ந்து அழிப்போம்,
சாகும் வரைபோராடுவோம்,பயமில்லை ,கலக்கமில்லை.
காலனையும் காலத்தையும் சிரித்துக்கொண்டே வரவேற்போம்.

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

சமூக வலைதளங்கள் (facebook)

No comments
முன்பெல்லாம்
என்னுடைய கிறுக்கல்களையும்,
சுய துக்கங்களையும்
என் டைரியில் கிறுக்கிக்கொண்டிருந்தேன்,
இப்போது பக்கத்து வீட்டுக்காரன் டைரியில்
கிறுக்கி காத்துகொண்டிருக்கிறேன்.
அவனுடைய பதிலுக்காக!!!

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

இடைவெளி

1 comment
இடைவெளிக்கு
மதிப்பில்லையென்று யார் சொன்னது?
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும்
இடையேயான இடைவெளிதான்
அவர்களின் காதலை இனிக்க செய்து
கல்யாணத்தை புளிக்க செய்கிறது!!!

1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

அந்த தீபாவளி

2 comments
அப்போதெல்லாம்
இரண்டு ஒட்டுப்போட்ட டவுசர்
இரண்டு நைந்த சட்டை என
வருடத்தை ஓட்டிய நான்
புது துணிகளுக்காக தீபாவளியை
எதிர்பார்த்து காத்திருந்தேன்,

வெளியூரில் வேலைபார்க்கும்,படிக்கும்
அண்ணண் மற்றும் நண்பர்களை
சந்திக்க கிடைக்கும் அந்த அரிய
சந்தர்பத்திற்காக தீபாவளியை
எதிர்பார்த்து காத்திருந்தேன்,

வருடம் முழுவதும் உழைத்த
அம்மாவுக்கும்,அப்பாவுக்கும்
தீபாவளி அன்றுதான் ஓய்வுநாள்,
அவர்கள் செய்துதரும்
அந்த பலகாரத்திற்காக தீபாவளியை
எதிர்பார்த்து காத்திருந்தேன்,

அப்பா எடுத்து தரும்
புத்தாடைகளை நண்பர்கள்
ஏற்றுகொள்வார்களா என்ற
எதிர்ப்பார்ப்புகளுடன்  தீபாவளியை
எதிர்பார்த்து காத்திருந்தேன்,

மத்தாப்புகளும்,வாணவேடிக்கைகளும்
வாங்க முடியாமல் போனாலும்
போன தீபாவளிக்கு நண்பன் வெடி தந்தமாதிரி
இந்த தீபாவளிக்கும் தருவானோ? என தீபாவளியை
எதிர்பார்த்து காத்திருந்தேன்,

வருடம் ஒருமுறை குடும்பத்தோடு
அமர்ந்து இலை விரித்து சாப்பிடும்
அந்த ஒரு நாளுக்காக தீபாவளியை எதிர்பார்த்து
காத்திருந்தேன்,

இப்படி எல்லா எதிர்ப்பார்ப்புகளும் சேர்ந்து
தீபாவளியை ஒரு திருவிழாவாக
காண்பித்தன,உற்சாகம் கரைபுரண்டு
ஓடச்செய்தன.

ஆனால் இன்று என்னிடம்
எல்லாம் இருப்பதால்,
எதிர்பார்ப்பே இல்லாமல்
ஒரு சாதாரண வார விடுமுறை போல்
சிறு புன்னைகையுடன்
வார்த்தை வாழ்த்துகளுடன்
என் தீபாவளி முடிந்துவிடுகிறது.


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!!!



 








2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

வெறுமையின் வலி

1 comment
வெறுமை
இங்கே கொட்டிக்கிடக்கும்
வரிகளுக்குள்ளும் வார்த்தைகளுக்குள்ளும்
நீங்கள் எதை தேடிக்கொண்டு வந்தீர்களோ?
அதைதான் நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்!
உணர்வுகளை தேடும் மனிதர்களின்
நடுவில் இந்த வெறுமையின் வலிகளை
வரிக்கும் வெற்று மனிதன் நான்!!

1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

பெண்மை

2 comments
பெண்மை
ஆண் உடலின்
ஒன்பது வாசல்களிலும்
நுழைந்து பரவமூட்டும்
ஒரு வரிக்கவிதைதான்
பெண்மை.

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

விஸ்வரூபம்

1 comment
சூழ்ச்சி வலையால்
பசுவின் கழுத்தை நெறித்த
பசுந்தோல் போர்த்திய
புலியென தீவிரவாதம்.
பசு புனிதம் - அதுபோல்
எல்லா மதமும் புனிதம்.
பசுவை வணங்கும் நாம்
பசுந்தோல் போர்த்திய
புலிகளை வணங்குவது தகுமோ?
மதத்தை வணங்கலாம்.
ஆனால் அதன் பின்னால்
ஒளிந்து வாழும்
மக்களை கொல்லும்
மனித பீரங்கிகளை
துடைத்து  துடைத்து 
வணங்கவா முடியும்?
தவறுகளை சுட்டிக்காட்டும்
விரல்களை வெட்ட ஆரம்பித்தால்
உலகமும் நரகம்.
அதே ஏற்றுக்கொண்டால்
நரகமும் சொர்க்கம்.
மனிதன் மனிதானாக
இருக்கவே மதம்.
மதம் கருணையாகும் போது
கடவுள் ஆகிறது.
மதம் கருகும் போது
மிருகமாகிறது.
எங்கே கொள்கையும்
பாதையும் தவறப்படுகிறதோ
அங்கே மதம் கருகுகிறது.
கருகுவதன் காரணத்தை
சுட்டிக்காட்டி ஆளில்லை.
போராட ஆளில்லை.
களை வெட்ட ஆளில்லை.
ஆனால் சுட்டிகாட்டுபவனை
வெட்டி எறிய கூட்டமுண்டு.
குறைகளை ஏற்காத,சகிக்கமுடியாத
எல்லாம் டார்வின் பரிணாமப்படி
வாழ்ந்தாக சரித்திரம் இல்லை.
மாற்றமென்பது நம்மிடம் வரவெண்டியது
அடுத்தவரிடம் இல்லை.
மாறுவோம் மனிதனாவோம்.







1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

ஜென் நிலா

3 comments
நிலா
வெறும் நிலா
நிர்வாண நிலா
நிலா நிலாவாக
இருப்பதை தவிர
வேறொன்றும் இல்லை.

3 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..